search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச சைக்கிள்கள்"

    • நிகழ்ச்சியில் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.
    • பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் முத்துப்பாண்டி தலைமை தாங்கினார்.

    மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செய லாளர் பெரியதுரை முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி, கிளை செயலாளர் எஸ்.பி. முருகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வீரகுமார், ஒன்றிய பிரதிநிதி சதீஷ்குமார், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் குட்டிராஜ், ஒன்றிய இளைஞ ரணி அமைப்பாளர் கார்த்திக் மற்றும் மனோஜ்குமார், சின்னத்துரை, செந்தூர் பாண்டியன், வல்லரசு, யேசுதாஸ், மகேந்திரன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஒன்றிய நிர்வாகி கள், கிளை நிர்வாகிகள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • விலையில்லா சைக்கிள்களை, மாணவ- மாணவிகளுக்கு சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் ஆகியோர் வழங்கினர்.
    • நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை, மாணவ- மாணவிகளுக்கு சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும் வாசு. வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன், வாசு தெற்கு ஒன்றிய செயலாளர் பூசைப்பாண்டியன், பேரூர் செயலாளர் ரூபி பாலசுப்ரமணியன், ம.தி.மு.க. வாசு. ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், பேரூர் செயலாளர் பாசறை கணேசன், மாவட்ட பிரதிநிதி ராமர், தி.மு.க. நிர்வாகிகள் முத்தையா, கட்டபொம்மன், சுந்தர், செல்லத்துரை, ம.தி.மு.க. நிர்வாகிகள் உள்ளார் விக்கி, பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ - மாணவிகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • இலவச சைக்கிள் வழங்கும் விழாவிற்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார்.
    • நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கடங்கநேரி பஞ்சாயத்து ரெட்டியார் பட்டி கிராம கமிட்டி மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி, யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், ஒன்றிய செயலாளர்கள் செல்லதுரை, அன்பழகன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சமுத்திர பாண்டியன், ஆலடி எழில்வானைன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் குகன் வரவேற்று பேசினார்.

    விழாவில் பள்ளியில் படிக்கும் 290 மாணவ,மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ரமேஷ், ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி பாலகுமார், ஒன்றிய கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோஸ், கிளை செயலாளர் கணேசன், மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பூலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • விழாவில் 138 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

    ஆலங்குளம்:

    கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், பூலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. கீழப்பாவூர் யூனியன் சேர்மன் சீ.காவேரி சீனித்துரை தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் திரவியக்கனி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை ஜுலியா டெய்சி மேரி வரவேற்றார்.

    மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெய பாலன், மாநில சுற்றுச்சூழல் அணித்தலைவர் பூங்கோதை ஆலடி அருணா ஆகியோர் பங்கேற்று 138 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினர்.

    இவ்விழாவில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜெ.கே.ரமேஷ், மாவட்ட பிரதி நிதிகள் சீ.பொன் செல்வன், முத்து ராஜ், பொறியாளர் அணி துணை அமைச்சர் சிவராஜன், கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவன் பாண்டியன், பெத்த நாடார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராணி, ஒன்றிய கவுன்சிலர் நாக ராஜன், இளைஞரணி கோமு, நிர்வாகிகள் தளபதி முருகேசன், தங்கச்சாமி, முயல், சீதாராமன், செந்தில், காளிமுத்து, மாரி முத்து, மோகன், இளைஞரணி துணை அமைப்பாளர் சிவ குமார், சச்சின், ஜெயக்குமார், ஓவிய ஆசிரியர் ராமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அமைச்சர் அர.சக்கரபாணி கலந்துகொண்டு 120 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
    • பின்னர், கள்ளிமந்தையம் திருப்பதி அருள்நெறி மேல்நிலைப்பள்ளியில் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அமைச்சர் அர.சக்கரபாணி கலந்துகொண்டு ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, ரூ.14.15 கோடி மதிப்பீட்டில் பள்ளிகளில் புதிய கட்டிட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 120 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    பழனி ஊராட்சி ஒன்றியம், மேலக்கோட்டை ஊராட்சி, பெருமாள்நாயக்கன்வலசு கிராமத்தில் ரூ.10லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாயக்கூடம், எரமநாயக்கன்பட்டியில் ரூ.23.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் ஆகியவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் கால்நடை பராமரிப்பு நடைமுறை மூலதனக்கடனாக 63 பயனாளிகளுக்கு தலா ரூ.56,000 கடனுதவி வழங்கினார்.

    தொடர்ந்து ஒட்டன்சத்திரம் கே.ஆர்.அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தில் ரூ.2.6 கோடி மதிப்பீட்டில் 12 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம், தனியார் பங்களிப்புடன் ரூ.6.00 கோடி மதிப்பீட்டில் 36 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் என ரூ.8.60 கோடி மதிப்பீட்டில் 48 வகுப்பறைகள் கொண்ட கட்டிடங்கள் கட்டுவதற்கும், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பரப்பலாறு அரசு மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் 14 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம், மேல்கரைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.1.45 கோடி மதிப்பீட்டில் 5 வகுப்பறை கட்டிடம் மற்றும் ஆய்வுக்கூடம் கட்டுவதற்கும், கொக்கரக்கண்வலசு அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் 5 வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கும் என மொத்தம் ரூ.14.15 கோடி மதிப்பீட்டில் பள்ளி வகுப்பறை கட்டுமான பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    அம்பிளிகை ஜேக்கப் நினைவு கிறித்துவ கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பெரியகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, அம்பிளிக்கை சாந்தி நிகேதன் மேல்நிலைப்பள்ளி, ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 120 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் மற்றும் குறு வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். பின்னர், கள்ளிமந்தையம் திருப்பதி அருள்நெறி மேல்நிலைப்பள்ளியில் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

    இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்திலகவதி, ஒட்டன்சத்திரம் நகர் மன்ற தலைவர் திருமலைசாமி, நகர்மன்ற துணைத் தலைவர்வெள்ளைச்சாமி, நகராட்சி ஆணையாளர் மீனா, பழனி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்ஈஸ்வரி கருப்புச்சாமி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்சங்கீதா பழனிச்சாமி, பழனி வருவாய் கோட்டாட்சியர்சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்ரவீந்திரன், தாஹிரா, மாவட்ட கல்வி அலுவலர்(பழனி) பரிமளா, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர்முத்துசாமி, ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 165 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை பேரூராட்சி தலைவரும், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவருமான வெங்கடேசன் வழங்கினார்
    • உடற்கல்வி ஆசிரியர்கள் நாகராஜ், ஜெயபிரகாஷ் நாராயணன், மற்றும் பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் மாணவர்கள் உள்ளிட்டோர் பலர்கலந்து கொண்டனர்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 165 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை பேரூராட்சி தலைவரும், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவருமான வெங்கடேசன் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திகா பன்னீர் செல்வம், கவுன்சிலர்கள் கீதா வடிவேல், கார்த்திகேயன், வேலு, வெங்கடேசன், அபிராமி காந்தி மற்றும் சௌந்தர வைத்திஸ், மாவட்ட பிரதிநிதி பன்னீர்செல்வம், தலைமை ஆசிரியர் தேவராஜ், உதவி தலைமை ஆசிரியர் பழனிசாமி, ஆசிரியர்கள் தமிழ் ஆசிரியர் மகேஷ், ரங்கநாதன், உடற்கல்வி ஆசிரியர்கள் நாகராஜ், ஜெயபிரகாஷ் நாராயணன், மற்றும் பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் மாணவர்கள் உள்ளிட்டோர் பலர்கலந்து கொண்டனர்.

    • அரியநாயகிபுரம் இந்து நாடார் உறவின்முறை கமிட்டி பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன் முன்னிலை வகித்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் ஒன்றியம் அரியநாயகிபுரம் இந்து நாடார் உறவின்முறை கமிட்டி மேல் நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சங்கரன் கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன் முன்னிலை வகித்தார். பள்ளி செயலாளர் அருண கிரி சாமி வரவேற்று பேசினார். தொடர்ந்து வடக்கு மாவட்ட செய லாளர் ராஜா எம்.எல்.ஏ. மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    இதில் ஒன்றிய கவுன்சிலர் கணேச புஷ்பா, அரிய நாயகிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகவேல், ஊராட்சி மன்ற துணை தலைவர் காசி சிவகுருநாதன், கிளை செயலாளர் ராமகி ருஷ்ணன், மாவட்ட மாணவர் அணி அமைப்பா ளர் உதயகுமார், ஒன்றிய அவைத்தலைவர் நடராஜன், தகவல் தொழில்நுட்ப பிரிவு பாலமுருகன், சின்னதுரை, கிளை செயலாளர் மதியழகன், முத்துசாமி, பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் செல்லையா நன்றி கூறினார்.

    • 155 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டி கள் வழங்கப்பட்டது.
    • நிகழ்ச்சி பள்ளியின் தலைமையாசிரியர் ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள பொ.துறிஞ்சிப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளியின் தலைமை யாசிரியர் ஆனந்தகுமார் தலைமையில் நடை பெற்றது.

    பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய குழு தலைவர் உண்ணாமலை குண சேகரன் சுமார் 155 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி களை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு உறுப்பினரும், தி.மு.க ஒன்றிய கழக செயலாளருமான பி.எஸ்.சரவணன், ஒன்றிய குழு உறுப்பினர் தாரணி ராஜேஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர்கழக தலைவருமான பாபு (எ)முருகன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுரியா பானு நியாமத் மற்றும் ஒன்றிய தி.மு.க கழக துணை செயலாளர்கள் ஜகிதா செரீப், வே.செல்வன், ராஜேந்திரன், மாவட்ட கழக பிரநிதிகள் பன்னீர்ச்செல்வம், இரவி, இராமன், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் செல்வராஜ், ஜான்அக்பர், ஆபிஸ், சதாசுர ்ஜித், வழக்கறிஞர் சக்திவேல், தண்டபானி, கிளைக்கழக செயலாளர்கள் ராமலிங்கம், சேட்டு, சின்னப்பன், அக்பர், ரத்தினம், முருகன், அப்பாவு, ரத்தினம், முருகன், ஊள்ளாட்சி பிரதிநிதிகள், பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு விலை இல்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.

    சின்னமனூர்:

    ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு விலை இல்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், சின்னமனூர் ஒன்றிய குழு தலைவர் நிவேதாஅண்ணாதுரை, ஓடைப்பட்டி பேரூராட்சி தலைவர் தனுஷ்கோடி, சின்னமனூர் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, தேனி மாவட்ட விவசாயதொழிலாளர் அணிமாவட்டசெயலாளர் செந்தில்குமார், உத்தமபாளையம் வட்டாட்சியர் பால்பாண்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • 507 மாணவிகளுக்கு வினியோகம்
    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்

    செய்யாறு:

    செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் எல்லப்பன் தலைமை தாங்கினார்.

    வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் மாமண்டூர் ராஜு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரவிக்குமார், பள்ளி வளர்ச்சி குழு தலைவர் சின்னதுரை ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

    பள்ளி தலைமை யாசிரியர் உமா மகேஸ்வரி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 507 மாணவிகளுக்கு இலவச சைக்கிளை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் செய்யாறு கல்வி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு தொகை வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர் கே. விஸ்வநாதன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் தேவி, நகர மன்ற துணைத் தலைவர் பேபி ராணி, ஒன்றிய செயலாளர் ஞானவேல், தொண்டர் அணி அமைப்பாளர் ராம்ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன் தலைமையிலும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அசோக் முன்னிலையிலும் ஒ.ஜோதி எம்எல்ஏ 371 மாணவர்களுக்கு இலவச சைக்கிளை வழங்கினார்.

    • நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 1200 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வேலுச்சாமி எம்.பி வழங்கினார்.
    • நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 1200 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வேலுச்சாமி எம்.பி வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், வடக்கு ஒன்றிய செயலாளர் சவுந்திரபாண்டியன், நிலக்கோட்டை நகர செயலாளர் ஜோசப், நிலக்கோட்டை பேரூராட்சித் தலைவர் சுபாஷினி கதிரேசன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் டாக்டர் செல்வராஜ், அம்மையநாயக்கனூர் நகர செயலாளர் விஜயகுமார்,

    நிலக்கோட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் சுசீந்திரன், நிலக்கோட்டை பேரூராட்சி துணைத் தலைவர் முருகேசன், சிலுக்குவார்பட்டி ஆர். சி. மேல்நிலைப் பள்ளி தாளாளரும், பங்குத்தந்தையுமான ஜோசப்அமலன், மாவட்ட கவுன்சிலர் நாகராணி ராஜ்குமார், நிலக்கோட்டை பேரூராட்சி கவுன்சிலர் காளிமுத்து, பள்ளி தலைமை ஆசிரியர்கள் அமுதா, எலிசபெத்து ஸ்டெல்லா மேபல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் கலந்து கொண்டு 272 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.
    • முன்னதாக பள்ளி தலைமையாசிரியை தமயந்தி வரவேற்றார்.

    ஓசூர்,

    ஓசூர் அருகே ஜுஜுவாடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளர்களாக, ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் கலந்து கொண்டு 272 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி விழாவில் பேசினார்கள். முன்னதாக பள்ளி தலைமையாசிரியை தமயந்தி வரவேற்றார்.

    மேலும் இதில், துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி கல்விக்குழு தலைவர் எச். ஸ்ரீதரன், மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவர் அசோகா, பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் ராஜசேகர் துணைத்தலைவர் ஆனந்த ரெட்டி, பொருளாளர் வெங்கடேஷ் மற்றும் நிர்வாகிகள், மற்றும் ஆசிரிய, ஆசிரியையர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×